Tuesday, February 15, 2011

அட போங்கடா

நரைத்த தலையில்
கருப்பு சாயம்
பூசியும்-
முகத்தில் தெரியுது
மூப்பு...

தலை முடியின்-
முன் முடியை
நேராக்கி
அதனையே
முன் நெற்றியில்
சுருளாக்கி-
கழுத்தின் கிடக்கும்
தங்கச் சங்கிலியும்,
கையில் கட்டிய கடியாரமும்
சரியாய் உள்ளதை உறுதிப்படுத்தி...

பேருந்தில்-
மூன்று மாதமாய்...
நான் பார்க்க
எனைப் பார்க்காத
அவள்...

அவள் இறங்கும்
நிறுத்தத்தில்
அவளுக்கு முன்னே
நான் இறங்கி நிற்க்கையில்-

என்னிடம் பேசிய
முதல்
பேச்சு-

மணி என்ன அங்கிள்?

No comments: