தேடிச் சோறு நிதந் தின்று-பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்ப மிக வுழன்று -பிறர்
வாடப் பல செயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி -கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
No comments:
Post a Comment